100 ஆவது சதம் அடிக்க இருக்கும் சச்சின் டெண்டுல்கருக்கு அவரது மகன் அட்வைஸ் கூறியுள்ளார். சதமடிக்கும்போது ஏற்படும் பதற்றத்தை தவிர்க்க, 90 ரன்களை தாண்டிய உடன் அதிரடியாக சிக்ஸர் அடித்துவிட வேண்டும் என்று சச்சினின் மகன் அர்ஜூன் அவரிடம் தெரிவித்துள்ளார். இந்திய மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் தனது சர்வதேச 100ஆவது சதத்தை கடக்க வேண்டும் என்று அவரது ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பு தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
ஆனால் அதை எட்ட முடியாமல் சச்சின் தவித்து வரும் நிலையில் இன்று மும்பையில் தொடங்கும் 3ஆவது டெஸ்ட் போட்டியின் போதாவது சச்சின் 100ஆவது சதத்தைப் போடுவாரா என்று ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்த்துள்ளனர்.

0 comments:
Post a Comment