(ஏ.ஜே.எம். ஹனீபா)
சம்மாந்துறை அன்வர் இஸ்மாயீல் ஞாபகாத்த ஆதார வைத்தியசாலையின் வரலாற்றில் முதலாவது மகப்பேற்று சத்திர சிகிச்கை நாளை வியாழக்கிழமை காலை10 மணிக்கு மகப்பேற்று வைத்திய நிபுணர் வைத்திய கலாநிதி யுரேக்கா சிறி விக்ரமசிங்க தலைமையில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி எம்.எஸ்.இப்றாலெப்பை, மகப்பேற்று பிரிவு பொறுப்பதிகாரி வைத்தியர் எம்.எம்.எம்.சபீர் உட்பட அம்பாறை பொது வைத்தியசாலையிலிருத்து விசேட மயக்க மருந்து நிபுணர்களும், அக்கரைப்பற்று ஆதார வைத்திய சாலையிலிருந்து இரத்தவங்கி நிபுணர்களும் வருகை தரவுள்ளதாக சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் ஞாபகாத்த ஆதார வைத்திய சாலையின் அத்தியட்சகர் டாக்டர் ஏ.இஸ்ஸதீன் எமக்குத் தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வுக்காக சத்திர சிகிச்சைக்கூடத்தின் சகல இயந்திர சாதனங்களும் தயார்படுத்தப்பட்டு வருகின்றது.
0 comments:
Post a Comment