Monday, December 26, 2011

பல்கலைக்கழக பகிடிவதைகளுக்கு விரிவுரையாளர்களும் உதவி - எஸ்.பி.



(கலாநெஞ்சன்)
பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் பகிடிவதைகளுக்கு ஒரு சில விரிவுரையாளர்களின் உதவி மாணவர்களுக்கு கிடைப்பதாக உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க தெரிவித்துள்ளார். பேராதனை பல்கலைக் கழகத்தில் முதலாண்டு மாணவர்களுக்கு பகிடிவதை மேற்கொள்ளப்படும் போது, அதனை கண்ட விரிவுரையாளர் ஒருவர் அந்த பகிடி வதையை நிறுத்த எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை எனவும் அமைச்சர் எஸ் .பி. திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

0 comments:

Post a Comment