தெற்கு சோமாலியாவில் கென்யா விமானப்படை நடத்திய தாக்குதலில் 60 அல் ஸபாப் போராளிகள் கொல்லப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது. 50க்கும் மேற்பட்ட நபர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. ஒன்பதுக்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதமடைந்தன. ராணுவத்திற்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர்கள் கூறியுள்ளனர்.
இதற்கிடையே கென்யாவுக்கு போராளிகளின் மிரட்டல் அதிகரித்துள்ளதாக பிரிட்டன் ரகசிய ஏஜன்சிகள் கூறியுள்ளன. கென்யாவில் ஆடம்பர ரிஸாட்டில் வைத்து பிரிட்டன் சுற்றுலா பயணி கொல்லப்பட்டார். இதற்கு காரணம் அல் ஸபாப் போராளிகள் என கென்யா அரசு குற்றம் சாட்டியது. இச்சம்பவத்திற்கு பிறகு அல் ஸபாபிற்கு எதிராக அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
ஜனவரி 4ஆம் தேதி கென்யா ராணுவத்திற்கும், அல் ஸபாப் போராளிகளுக்கும் இடையே நடந்த மோதலில் 12 போராளிகள் கொல்லப்பட்டனர். ஒருநாளுக்குப் பிறகு நடந்த தாக்குதலில் 13க்கும் மேற்பட்ட அல் ஸபாப் போராளிகள் கொல்லப்பட்னர். கென்யா தாக்குதலை தொடர்ந்து மோதல் பகுதியில் இருந்து அல் ஸபாப் போராளிகள் திரும்பிவிட்டதாக சோமாலிய ஊடகங்கள் கூறுகின்றன.

0 comments:
Post a Comment