(ஏ.ஜே.எம்.ஹனீபா)
உலக உணவு வேலைத்திட்டத்தின் கீழ் சம்மாந்துறை செயலகத்தினால் தையல் பயிற்சி நிலையங்களினுடாக தையல் பயிற்சிகளை முடித்துக் கொண்ட யுவதிகளுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வும், உற்பத்திப் பொருட்களின் கண்காட்சியும் இன்று சம்மாந்துறை அல்-மர்ஜான் மகளிர் கல்லூரியில் பிரதேச செயலாளர் ஏ.மன்சூர் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எல்.ஏ.அமீர், அம்பாரை மாவட்ட திட்டமிடல் பணிப்பாளரும் உலக உணவுத்திட்டத்தின் மாவட்ட நிறைவேற்று அதிகாரியுமான எஸ். அன்வர்டீன், உலக உணவுத் திட்டத்தின் மட்டு, அம்பாரை மாவட்ட வதிவிடப் பிரதிநிதி திருமதி செனப் ஹெபிற்றி, ஜனாதிபதி கூட்டிணைப்பு உத்தியோகத்தர் எம்.ரி. கரீம், கணக்காளர் ஏ.எல். மஹ்றூப், உதவி திட்டமிடல் பணிப்பாளர் கே.எல். ஹம்சார், அபிவிருத்தி இணைப்பாளர் ஐ.எல்.யூ. றாபியூ, அபிவிருத்தி உதவியாளர் எம்.ஐ.எம்.பஸீர், சம்மாந்துறை பிரதேச சபையின் முன்னாள் உதவி தவிசாளர் எம்.ஏ. தம்பிக்கண்டு உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் 400 யுவதிகளுக்கு சான்றிதழ் அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
0 comments:
Post a Comment