Thursday, October 27, 2011

ஊஞ்சல் கட்டி விளையாடிய சிறுவன் மரணம்


சாறியினால் ஊஞ்சல் கட்டி அதிலிருந்து சுழன்று ஆடிக்கொண்டிருந்த சிறுவன், சாறியினால் கழுத்துப் பகுதி சுற்றப்பட்டு இறுகி மூச்சுத் திணறலுக்கு உள்ளாகி பரிதாபகரமாக உயிரிழந்தான். இந்தச் சம்பவம் புங்குடுதீவு 3ஆம் வட்டாரத்தில் நேற்றுக் காலை 7 மணியளவில் இடம் பெற்றது. சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த மகாலிங்கம் நிர்மலன் (வயது 11) என்ற சிறுவனே உயிரிழந்தான் என்று ஊர்காவற்றுறைப் பொலிஸார் தெரிவித்தனர்.

சிறுவனைக் காப்பாற்றும் நோக்கில் உடனடியாகவே அயலவர்களால் ஓட்டோ மூலம் புங்குடுதீவு வைத்தியசாலைக்கு அவன் கொண்டுசெல்லப்பட்டான். அங்கு வைத்தியர் இல்லை. அதைத்தொடர்ந்து வேலணை வைத்தியசாலைக்கு சிறுவன் கொண்டு செல்லப்பட்டு, அங்கு பரிசோதனை செய்தபோது ஏற்கனவே உயிரிழந்து விட்டான் என்பது தெரியவந்தது.

பின்னர் சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. புங்குடுதீவு மகாவித்தியாலயத்தில் கல்வி பயின்ற இந்தச் சிறுவனுக்கு நான்கு சகோதரிகள் உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது.

0 comments:

Post a Comment