Thursday, November 17, 2011

பஸ் கட்டணங்கள் 3.5 சதவீதம் அதிகரிப்பு


(பஹமுன அஸாம்)  
எட்டு ரூபாவினால் டீசலின் விலை அதிகரிக்கப்பட்டதால் பஸ் கட்டணங்கள் 3.5 விதத்தால் அதிகரிக்கப்படுமென நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் தனியார் பஸ் உரிமையாளர்களின் சங்கத் தலைவர் கெமுனு விஜயரத்ன தெரிவித்தார். 

இதன்படி ஆரம்பக் கட்டணங்களான 7 ரூபாய், 10 ரூபாயில் எந்த மாற்றமும் ஏற்படுத்தப்பட மாட்டாது எனவும், 13 ரூபாய்க்கு மேற்பட்ட தெகையில் இருந்து கட்டண மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் எனவும், 1 ரூபா தொடக்கம் 20 ரூபாய் வரை இந்த கட்டணங்கள் அதிகரிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் உடன்படிக்கையில் குறிப்பிட்டதுபோல் ஒரு மாதகாலத்துக்குள் இந்த கட்டண அதிகரிப்புக்களை நடைமுறைப்படுத்தாவிட்டால் வேலைநிறுத்தப் போராட்டத்தில் இறங்குவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

0 comments:

Post a Comment