Tuesday, November 01, 2011

எலிசபெத் மறைவு செய்திக்கு BBC பயிற்சி


இங்கிலாந்து மகாராணி 2ஆம் எலிசபெத் மறைந்தால் அதுபற்றி செய்தி வெளியிடும் முறை பற்றி ஊழியர்களுக்கு பி.பி.சி. பயிற்சி அளிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து லண்டனில் வெளியாகும் தி சண்டே டைம்ஸ் நாளிதழில் இடம்பெற்ற செய்தியில், 2002ஆம் ஆண்டில் இங்கிலாந்து மகாராணி இறந்தபோது அதை இங்கிலாந்து அரசு செய்தி நிறுவனமான பி.பி.சி. வெளியிட்ட விதம் கடும் சர்ச்சைக்கு உள்ளானது. 

அனுபவம் வாய்ந்த செய்தி வாசிப்பாளர் பீட்டர் சிசன்ஸ் பழுப்பு நிற கோட், பிரவுன் நிற டை அணிந்து ராணி மறைவை அறிவித்தார். அதுபோன்ற தவறு ஏற்பட்டு விமர்சனத்துக்கு உள்ளாகாமல் இருக்க, மகாராணி 2ஆம் எலிசபெத் மறைவை அறிவிப்பதற்கான பயிற்சியை பி.பி.சி. தொடங்கியுள்ளதாக தெரிகிறது.

இதற்கான போலி வீடியோ ஒளிபரப்பி ஊழியர்களுக்கு செய்தி வெளியிட பயிற்சி தரப்படுகிறது. துக்கச் செய்தியை அறிவிக்கும்போது செய்தி வாசிப்பாளர்கள் அணிய வேண்டிய உடைகள் அலமாரிகளில் வைக்கப்பட்டன. மற்ற நிகழ்ச்சிகள் ஒத்திவைப்பு, தேசிய கீதம் ஒலிபரப்பு, வாழ்க்கை வரலாறு வீடியோ ஆகியவை பற்றியும் ஊழியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

மகாராணி மறைந்தால் 12 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும். அதன் பிறகு அவரது உடல் அடக்கம் செய்யப்படும் வரை மட்டுமின்றி அதன் பிறகு சில நாட்களும் நகைச்சுவை நிகழ்ச்சிகள் ஒளிபரப்பக்கூடாது என்றும் பயிற்சி வழங்கப்படுகின்றது. இவ்வாறு தி சண்டே டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

0 comments:

Post a Comment