க.பொ.த. உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் டிசம்பர் 9ஆம் திகதிக்கு முன் வெளியாகவுள்ளது. பெறுபேறுகளை பாடசாலை மூன்றாம் தவணை விடுமுறைக்கு முன்னர் வெளியிட முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அநுர எதிரிசிங்க தெரிவித்துள்ளார். பெறுபேறுகளை தயாரிக்கும் பணிகள் தற்போது இடம்பெற்று வருவதாகவும் மேலும் தெரிவித்தார்.
இந்த ஆண்டுக்கான மூன்றாம் தவணை விடுமுறை எதிர்வரும் டிசம்பர் 9ஆம் திகதி வழங்கப்படவிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment