கிழக்கு முதல்வருக்கும் பிரான்ஸ் உயர்ஸ்தானிகருக்கும் இடையில் முக்கிய சந்திப்பு கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களுக்கும் பிரான்ஸ் உயர்ஸ்தானிகர் கிறிஸ்ரின் ரொபிகோ அவர்களுக்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று நேற்றுமுன்தினம் காலை திருமலை முதலமைச்சர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
கிழக்கு மாகாணத்தின் பாதுகாப்பு நிலவரம் மற்றும் கிழக்கு மாகாண மக்களின் வாழ்க்கைத் தரம், மாகாணத்தின் அபிவிருத்தி மற்றும் எதிர்காலத்திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடப்பட்டது. மேற்படி கலந்துரையாடலில் கிழக்கு மாகாண முதலமைச்சரின் பித்தியேக செயலாளர் எம்.எம்.எம். ஹன்ஸீரும் கலந்துகொண்டார்.


0 comments:
Post a Comment