
திருகோணமலை மாவட்டத்தில் இவ்வாண்டு 168 பேர் டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளனர் என்று என்றும் ஒருவர் மூதூரில் டெங்கினால் உயிரிழந்துள்ளார் என்றும் திருகோணமலை பொது வைத்திய அதிகாரி டாக்டர் து. தவக்கொடிராசா தெரிவித்தார். கடந்த 3 மாதங்கள் திருகோணமலை நகர பொது சுகாதார வைத்திய பிரிவில் டெங்கு காய்ச்சலுக்கு ஒருவர் கூட ஆளாகவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
2011 இல் திருகோணமலை மாவட்டத்தில் டெங்கினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மாதவாரியாக வருமாறு, ஜனவரி-07, பெப்ரவரி-17, மார்ச்-25, ஏப்ரல்-25, மே-12, ஜூன்- 19, ஜூலை-21, ஆகஸ்ட்-06, செப்டெம்பர்-10, ஒக்டோபர்-03, நவம்பர்-08, டிசம்பர் இன்று 20ஆம் திகதி வரை-15.
0 comments:
Post a Comment