
(யு.கே.காலித்தீன்)
அம்பாறை மாவட்டத்தில் தற்பொழுது சீரான காலநிலை நிலவுகிறது. கடந்தவாரம் பெய்த மழை, சீரற்ற காலநிலை, கடல் கொந்தளிப்பு மற்றும் கடலரிப்பு காரணமாக மீனவர்கள் தமது கடற்தொழிலில் ஈடுபடாமல் பல சிரமங்களை எதிர்நோக்கி வந்தனர். அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பகுதிகள் தற்போழுது வழமைக்கு திரும்பியுள்ளதால் மீனவர்கள் கடலுக்கு செல்வதற்காக கரைவலைத் தோணியின் மூலம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்வதற்கு ஆயத்தமாகியுள்ளனர்.
குறிப்பாக சாய்ந்தமருது, கல்முனை மருதமுனைப் பிரதேசத்தைச் சேர்ந்த மீனவர்கள் இன்று கடலுக்குச் சென்று வந்ததைக் காணக் கூடியதாகவும் இருந்ததோடு அம்பாறை மாவட்டத்தில் மிகக் குறைந்தளவான கடற்றொழிலாளர்களே மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
0 comments:
Post a Comment