
லிபியாவில் கடாபியும் தனது சகோதரர்களும் கொல்லப்பட்டமை குறித்து ஐக்கிய நாடுகள் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டுமென அவரின் மகளான ஆயிஷா வலியுறுத்தியுள்ளார்.
கடாபியினதும் அவரது மகன் முதாஸியினதும் மரணங்கள் குறித்து விசாரிக்க சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஏதாவது நடவடிக்கை எடுத்துள்ளதா என ஆயிஷாவின் சட்டத்தரணி கேள்வி எழுப்பியுள்ளார்.
கடாபியும் மகன் முதாஸிமும் உயிருடன் பிடிக்கப்பட்டு கொடூரமான முறையில் கொல்லப்பட்டதாகவும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் இந்த குற்றச் செயல்கள் தொடர்பில் தற்போது விசாரணைகளில் ஈடுபடவேண்டுமெனவும் அவர் வலுயுறுத்தியுள்ளார்.
0 comments:
Post a Comment