(பஹமுன அஸாம்)
இனிவரும் காலங்களில் மாணவர்களுக்கு ஒவ்வெரு பரீட்சைகளுக்கும் வெவ்வேறு பரீட்சை இலக்கங்களை வழங்கும் திட்டத்தை நிறுத்தி அவர்களுக்கு அனைத்துப் பரீட்சைகளுக்கும் ஒரு பரீட்சை இலக்கத்தை வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
வேறு ஒரு பரீட்சை இலக்கத்தை எழுதுவது, பழைய பரீட்சை இலக்கம் ஒன்றை எழுதுவது அல்லது தேசிய அடையாள அட்டை இலக்கத்தைப் பயன்படுத்துவது போன்ற நடவடிக்கைகளால், மாணவர்களுக்கு பரீட்சைக்குத் தோற்றும்போது அல்லது பெறுபேறுகளைப் பார்க்கும்போது ஏற்படும் குழப்ப நிழைகளைத் தவிர்த்துக் கொள்ளுவதற்கு இத்திட்டம் பெரிதும் உதவியாக இருக்கும்.

0 comments:
Post a Comment