Friday, December 16, 2011

முகாமையாளரை மாற்றக் கோரி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

அட்டன் வெள்ளைஓயா (வெளிஓயா) தோட்டத்தின் ஐந்து பிரிவுகளையும் சேர்ந்த சுமார் 1500 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், தோட்ட முகாமையளர் மாற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்துப் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.கடந்த சில தினங்களாக தோட்ட முகாமையாளருடன் கொழுந்து நிறையிடுதல் குறித்து ஏற்பட்ட இழுபறி நிலையே இதற்கு காரணம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

வழமையாகத் தொழிலாளர்கள் பறித்த தேயிலை கொழுந்தின் அளவை அதிகரித்து 20 கிலோ கிராம் பறிக்க வேண்டும் எனத் தோட்ட முகாமையாளர் விடுத்த பணிப்புரைக்குத் தொழிலாளர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

பாதுகாப்புப் படையினரின் துணையை நாடவேண்டி வரும் என தோட்ட முகாமையாளர் அச்சுறுத்தியதாகவும் எனவே அவர் தோட்டத்தை விட்டு வெளியேற வேண்டும் எனக் கூறி நேற்று வியாழக்கிழமை முதல் தாம் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுப்பட்டுள்ளதாகவும் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

0 comments:

Post a Comment