Tuesday, December 20, 2011

பூப்புனித நீராட்டு விழா வீடு மரண வீடாகியது


மகளின் பூப்புனித நீராட்டு விழா, தந்தைக்கு மரண வீடாக மாறிய சம்பவம் ஒன்று யாழ். கல்வியங்காட்டில் இடம்பெற்றுள்ளது இதில் கோணேஸ்வரன் ஜெயராசா வயது 46 என்ற நபரே இவ்வாறு மரணமானவராவார் இவரது மகளுக்கு நேற்று திங்கட்கிழமை பூப்புனித நீராட்டு விழா நடைபெற ஏற்பாடாகியிருந்தது.

இந்நிலையில் வீட்டில் போடப்பட்டிருந்த பந்தலுக்காக மின்சார இணைப்பைப் பெற்றுக்கொள்ள முயன்ற வேளை மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே அவர் பலியானார். மகளின் பூப்புனித நீராட்டு விழாவிற்காக போடப்பட்ட பந்தல் தந்தையின் மரணவீட்டுப் பந்தலாக மாறியது.

0 comments:

Post a Comment