கல்முனை கல்வி வலயத்தின் 63ஆவது பாடசாலையாக "அக்பர் வித்தியாலயம்" நேற்று திங்கட்கிழமை பெரியநீலாவணை அக்பர் கிராமத்தில் மிகவும் கோலாகலமாக திறந்து வைக்கப்பட்டது. அக்பர் கிராம மக்களின் நீண்ட கால கனவு இப்போது நிறைவேறியிருக்கின்றது. அந்த கிராமத்து மக்கள் தூரப்பாடசாலைகளுக்கு சென்றே தங்கள் கல்வியை தொடர்ந்து வந்தனர்.
ஆரம்ப பிரிவுகளில் கற்று வந்த மாணவர் பல சிரமங்களை எதிர்கொண்டனர். இதனால் ஆரம்ப பாடசாலை ஒன்றின் அவசியம் பற்றி எல்லோராலும் உணரப்பட்டது. இந்த விடயம் அக்பர் கிராம மஸ்ஜிதுன் அக்பர் ஜும்மா பள்ளிவாசல் நிர்வாகத்தினரால் கவனத்தில் எடுக்கப்பட்டது. பள்ளிவாசல் நிர்வாகம் இந்த விடயத்தை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம். எல். துல்கர் நஹீமின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.
சட்டத்தரணி எம். எல். துல்கர் நஹீம் எடுத்த துரித முயற்சியின் பயனாக ஒரு மாதத்திற்குள் இந்த பாடசாலை அமைப்பதற்கான அனுமதி பெறப்பட்டது. கல்முனை வலயக்கல்வி பணிப்பாளர் எம்.ரீ. ஏ. தௌபீக் அவர்களின் முதல் முன்மொழிவுடன் கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் ரீ.எம்.ஈ. போல், கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் என். ஏ. ஏ. புஷ்பகுமார ஆகியோரின் ஊடாக கிழக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், காணி,காணி அபிவிருத்தி போக்குவரத்து அமைச்சர் கௌரவ விமலவீர திசநாயக்க அவர்கள் இதற்கான அனுமதியை வழங்கி இருக்கின்றார்.
கௌரவ கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி எம். எல். துல்கர் நஹீம் அவர்கள் இந்த நிகழ்வுக்கு தலைமை தாங்கினார். அக்பர் கிராமத்தின் முன்னாள் தலைவரும் இக்கிராமத்தின் முன்னோடியுமான வை. எல். அன்சார், தற்போதைய தலைவர் ஐ. எல். எம். பாறூக் ஆகியோரின் முன்னிலையில் இந்த விழா கோலாகலாமாக நடைபெற்றது.
பிரதம அதிதியாக கிழக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், காணி,காணி அபிவிருத்தி போக்குவரத்து அமைச்சர் கௌரவ விமலவீர திசநாயக்க அவர்கள் கலந்து கொண்டு பாடசாலையை திறந்து வைத்தார். கௌரவ அதிதியாக கிழக்கு மாகாண அமைச்சர் எம். எஸ். உதுமாலெப்பை கலந்து கொண்டு பாடசாலையின் நினைவுக்கல்லை திரை நீக்கம் செய்து வைத்தார்.
சிறப்பு அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே. எம். ஏ. ரசாக் கலந்து கொண்டார். மேலும் விசேட அதிதிகளாக கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் ரீ. எம். ஈ. போல், கல்முனை வலயக்கல்வி பணிப்பாளர் எம்.ரீ. ஏ. தௌபீக், பிரதிக்கல்வி பணிப்பாளர் எம். எஸ். ஏ. ஜலீல் சம்மாந்துறை வலயக்கல்வி பணிப்பாளர் எம். கே. எம். மன்சூர் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
மேலும் கமுனை மாநகர சபை உறுப்பினர் ஏ. ஆர். அமீர் கோட்டக்கல்வி பணிப்பாளர் எஸ். எல். ஏ. ரஹீம் உதவிக்கல்வி பணிப்பாளர் ஏ. எல். சக்காப் அக்பர் கிராம முஸ்லிம் விவாகப்பதிவாளர் எம். எம். உதுமாலெப்பை, சட்டத்தரணி எப். எம். ஏ. அன்சார் மௌலானா சத்தார் எம். பிர்தௌஸ் ஆகியோரும் அக்பர் பள்ளிவாசல் நிரவாகிகள் அதிபர்கள், ஆசிரியர்கள் பெற்றோர்களும் கலந்து சிறப்பித்தனர்.
இந்த நிகழ்வில் அக்பர் கிராமத்தின் முன்னோடியாக செயற்பட்டு தன்னை அர்பணித்து வரும் வை. எல். அன்சாருக்கு அதிதிகள் வாழ்த்து பத்திரம், நினைவுச்சின்னம் என்பன வழங்கி கௌரவித்தனர். அதிபர் ஏ.எம். ஜிப்ரியின் நன்றியுரையுடன் நிகழ்வு நிறைவு பெற்றது. பிறை எப்.எம். கட்டுப்பாட்டாளர் பஷீர் அப்துல் கையூம் தொகுத்து வழங்கினார்.

0 comments:
Post a Comment