இலங்கையில் தற்போது தரக்குறைவான டீசல் இறக்குமதி செய்யப்படுவதாக இலங்கை தனியார் பஸ் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் தமது சங்கத்துக்கு சொந்தமான பஸ்களில் டீசல் பாவனையை அவதாணித்த போது இவ்விடயம் தெரியந்ததாகவும் தெரிவித்தார்.
முன்னர் 10 கி.மீ. பிரயாணித்த டீசலால் தற்போது 8 கி.மீ. தூரமே பிரயணிக்லாம் என்று குறிப்பிட் கெமுனு விஜேரத்ன, அதற்கான காரணம் தற்போது இறக்குமதி செய்யப்படும் டீசலில் சல்பரின் அளவு குறைவாக இருப்பதுவே என்று குறிப்பிட்டார். ஏற்கனவே பெற்றோலின் விலை ஏற்றத்தால் மானிய அடிப்படையிலோ அல்லது பழைய விலையிலோ பெற்றோலைத் தருமாறு தனியார் பஸ்கள் சங்கம் கோரிக்கை விடுத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment