நிறைமாத கர்ப்பிணியான ஐஸ்வர்யா ராய் பிரசவத்துக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பிரசவத்திற்கு முன்பு சில உணவுப் பொருட்களை உண்ண வேண்டும் என்று ஆசையாக உள்ளதாம். பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா நிறை மாத கர்ப்பிணியாக உள்ளார். அவருக்கு எந்த நேரத்திலும் குழந்தை பிறக்கலாம். அதற்காக அவர் மும்பையில் உள்ள செவன் ஹிலிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மற்ற கர்ப்பிணிகளைப் போன்று சில உணவுப் பண்டங்கள் மீது ஆசை வந்துள்ளது.
புளி, அச்சாறு, பீட்சா, டோக்லா, தயிர் வடை, பாவ் பாஜி, பரோட்டா என்று பல உணவுப் பொருட்கள் சாப்பிட ஆசையாக உள்ளதாம். மனைவியின் ஆசையை நிறைவேற்ற அபிஷேக் கடை, கடையாக அழைந்து அவர் கேட்கும் உணவுப் பண்டங்களை வாங்கி வந்து தருகிறார்.
11.11.11. குழந்தை பிறக்குமென்ற பலத்த எதிர்பார்ப்பு சர்வதேச ரீதியில் இருந்துவந்தது. எப்போது ஐஸ்வர்யா ராய் கர்ப்பமாக உள்ளார் என்று அமிதாப் பச்சன் அறிவித்தாரோ அன்றிலிருந்து ஊடகங்கள் அவர் பின்னால் தான் தொங்கிச் செல்கின்றன. குழந்தை பிறப்பது பற்றி ஐஸ்வர்யா ராய் டென்ஷனாக இருக்காரோ இல்லையோ, ஊடகங்கள் டென்ஷனாக இருக்கின்றன.


0 comments:
Post a Comment