Tuesday, November 29, 2011

நீர்கொழும்பில் மக்கள் பார்வைக்கு ஜோன் பொஸ்கோவின் திருப்பண்டம்

(கலாநெஞ்சன்) 
புனிதர் ஜோன் பொஸ்கோவின் திருப்பண்டம் தாங்கிய திருவுடல் நீர்கொழும்பு டொன்பொஸ்கோ தொழிற் பயிற்சிக் கல்லூரி தேவாலயத்தில் மக்கள் தரிசனத்திற்காக காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. புனிதர் ஜோன் பொஸ்கோவின் திருப்பண்டத்தை பெரும் எண்ணிக்கையானவர்கள் தரிசித்து வருகின்றனர். இன்று முற்பகல் பாடசாலை மாணவர்கள் தரிசிப்பதற்கு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன.

இதேவேளை, புனிதர் ஜோன் பொஸ்கோவின் பெரிய உருவச்சிலை ஒன்று நீர்கொழும்பு பெரியமுல்லை ரயில் கடவை அருகில் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.





0 comments:

Post a Comment