(ஏ.ஜே.எம். ஹனீபா)
சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் ஞாபகாத்த ஆதார வைத்தியசாலையின் வரலாற்றில் முதலாவது மகப்பேற்று சத்திர சிகிச்கை இன்று வியாழக்கிழமை காலை 10.45 மணிக்கு மகப்பேற்று வைத்திய நிபுணர் வைத்திய கலாநிதி யுரேக்கா சிறி விக்ரமசிங்க மற்றும் மகப்பேற்று பிரிவு பொறுப்பதிகாரி வைத்தியர் எம்.எம்.எம்.சபீர் ஆகியோரின் தலைமையில் மௌலவி கே.எம்.கே.றம்ஸீன் காரியப்பர் அவர்களின் விசேட துஆப் பிராத்தனையுடன் நடைபெற்றது.
இந்நிகழ்வில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் மயக்க மருந்து நிபுணர் வைத்திய கலாநிதி ரீ.எஸ்.ஆர்.ரீ.ஆர். றஜப் முஹம்மட், சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் ஞாபகாத்த ஆதார வைத்தியசாலையின் சிறுபிள்ளை வைத்திய நிபுணர் வைத்திய கலாநிதி இப்லால் சுபைர், பொது வைத்திய நிபுணர் வைத்திய கலாநிதி சிசிரகுமார, வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஏ.இஸ்ஸதீன், மகப்பேற்று பிரிவு வைத்திய அதிகாரி டாக்டர் எம்.ஐ.முஸம்மில், டாக்டர் றிசான், டாக்டர் பிரசன்ன, மேற்றன் ரீ.எல்.ஏ.றசூல் உட்பட தாதிய உத்தியோகத்தர்கள், ஏனைய ஊழியர்கள் பலரும் சத்திர சிகிச்சை கூடத்தில் கடமையில் ஈடுபட்டிருந்தனர்.
இம்முதலாவது சத்திர சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டு மு.ப. 11.08 மணிக்கு ஆரோக்கியமான ஆண் குழந்தை பெறப்பட்டது இக்குழந்தையை பெற்றெடுத்த தாய்க்கு வைத்தியசாலை மூலம் அன்பளிப்புக்களும் வழங்கி வைக்கப்பட்டது.
0 comments:
Post a Comment