
(கலாநெஞ்சன்)
யாழ்.தீவு பகுதி மக்களுக்கு கடற்படையினரால் போக்குவரத்து சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இத்தீவுகளில் வாழும் மக்களுக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கும் உள்ள ஒரேயொரு போக்குவரத்து வசதி படகு சேவையாகும். தீவு வாசிகள் தமது ஜீவனோபாயத்தை மேற்கொள்வதற்கும் சுற்றுலாப் பயணிகள் தீவின் ரம்மியமான இடங்களை பார்வையிடுவதற்கும் படகு சேவைகள் இன்றியமையாது தேவைப்படுகின்றன.
நயினா தீவு, நெடுந்தீவு, அனல்தீவு, குறிகட்டுவான் ஆகிய இடங்களுக்கு கடற்படை விசேட படகு சேவைகளை நடாத்துகின்றது. நயினா தீவில் வழிபாடுகளுக்கு செல்லும் பக்தர்களுக்கென, கடற்படை 60 படகுகளை சேவையில் ஈடுபடுத்தியுள்ளது. இந்த படகுகளில் பயணம் செய்யும் பயணிகளின் பாதுகாப்பிற்கென விசேட கடற்படை படகுகளும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. கடற்படையின் ரேடார் தொகுதி மூலம் அந்த சேவைகள் தொடர்ந்தும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
0 comments:
Post a Comment