Saturday, December 10, 2011

ஆசிரியரைக் கொலை செய்தவர்களுக்கு பிணை


(கலாநெஞ்சன்) 
ஆங்கில ஆசிரியரை கொலை செய்த நபர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. சீதுவை, அமன்தொழுவ, வேத்தேவ, தெவலபொல மற்றும் வல்பொல ஆகிய பிரதேசங்களை சேர்ந்த நபர்களே பிணையில் விடுதலை செய்ய உத்தரவிடப்பட்டவர்களாவர்.

2001 டிசம்பர் மாதம் 13ஆம் திகதி சீதுவை பிரதேசத்தில் வைத்து மஹிந்த ஜயரத்ன சில்வா என்ற டியூசன் ஆசிரியரை கொலை செய்த சம்பவம் தொடர்பாக பிரதிவாதிகள் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

பிரதிவாதிகள் ஆசிரியரை கொலை செய்த பின்னர் அவரது மோட்டார் சைக்கிளையும் கடத்தி சென்றுள்ளனர்.

0 comments:

Post a Comment