Wednesday, December 14, 2011

தற்கொலைகளைக் கட்டுப்படுத்த facebook உதவி


சர்வதேச ரீதியில் அதிகரித்துவரும் தற்கொலைகளைக் கட்டுப்படுத்துவதில் பிரபல சமூக இணையத்தளங்களின் உதவிகளை நாடவுள்ளதாக மனித உரிமைகள் அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது. குறிப்பாக பேஸ்புக் இணையத்தளத்தின் மூலமாக இதற்கான திட்டங்களை மேற்கொள்ள அந்த அமைப்பு விருப்பம் வெளியிட்டுள்ளது.

மனதில் பிரச்சினைகளுடன் இருக்கின்றவர்கள், பேஸ்புக்கின் மூலமாக மனோதத்துவவியல் நிபுணர்களுடன் தொடர்புகொண்டு தீர்வுகளைப் பெற்றுக்கொள்ளும் வகையிலும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளன. அத்துடன் வாழ்க்கையில் நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ளவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையிலான திட்டங்களும் வடிவமைக்கப்படவுள்ளன.

0 comments:

Post a Comment