ஈராக்கின் தென்பகுதி மற்றும் தலைநகர் பக்தாத்தில் வியாழக்கிழமை இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் 68 பேர் கொல்லப்பட்டுள்ளனர். நாசிரியா நகரில் உள்ள ஷியா யாத்திகர்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டு தாக்குதலில் 44 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள்; தெரிவிக்கின்றனர்.
தலைநகர் பக்தாத்தின் ஷியா மக்கள் வாழும் பகுதிகளில் இடம்பெற்ற குண்டு தாக்குதலில் 24 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த குண்டுத் தாக்குதல்களில் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

0 comments:
Post a Comment