
கேகாலை, கலிகமுவ பிரதேசத்தில் வீட்டின் குளியலறை சுவர் இடிந்து விழுந்ததில் 3 வயது சிறுமி மிகவும் பரிதாபகரமான முறையில் உயிரிழந்துள்ளார். இடிபாடுகளுக்குள் சிக்கிய சிறுமியை மீட்டெடுத்து வைத்தியசாலைக்கு அனுமதித்தப் பின்னரே சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்துள்ளார்.
இடிந்து வீழ்ந்த சுவரின் பாகங்கள் சிறுமியின் நெஞ்சுப் பகுதியில் பலத்த காயத்தை ஏற்படுத்தியதிலேயே சிறுமி உயிரிழந்துள்ளமை மரண விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாக பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
0 comments:
Post a Comment