(நிதால்)
இலங்கை ஜமாஅதே இஸ்லாமி புத்தளம் கிளையின் ஏற்பாட்டில் துருக்கி நாட்டின் ஐ.எச்.எச். நிறுவனத்தின் உதவியுடன் புத்தளம் சமுர்த்தி மாவத்தையில் வைத்திய நிலையம் ஒன்று அண்மையில் திறந்து வைக்கப்பட்டது.
இலங்கை ஜமாஅதே இஸ்லாமி புத்தளம் கிளை நாஸிம் அஷ்ஷேஹ் எச்.எம். மின்ஹாஜ் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் புத்தளம் நகரசபை தலைவர் கே.ஏ. பாயிஸ் பிரதம அதிதியாக கலந்துகொண்டு வைத்திய நிலையத்தை திறந்து வைத்தார். துருக்கி நாட்டின் ஐ.எச்.எச். நிறுவனத்தின் பணிப்பாளர் முஹம்மது ஹனபி குதுலுகுலு உட்பட உயரதிகாரிகள் குழுவும் திறப்புவிழாவில் கலந்துகொண்டனர்.

0 comments:
Post a Comment